ஞாயிறு, நவம்பர் 10, 2013

உயில் ஏற்பாட்டில் எழுநாவின் இரண்டு நூல்கள் விமர்சன அரங்கு



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுநா வெளியீட்டகத்தின் இரண்டு நூல்களுக்கான விமர்சன அரங்கு 10.11.2013 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/ வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் எழுத்தாளர் அநாதரட்சகன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பரஞ்சோதி தங்கேஸ் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்ற நூல் பற்றிய விமர்சன உரைகளை தெணியான், ஏ.சீ.ஜோர்ச் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து அ. கௌரிகாந்தன் எழுதிய “யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலாநந்தரும்” என்ற நூலுக்கான விமர்சன உரைகளை இ. இராஜேஸ்கண்ணன், சி. ரமேஸ் ஆகியோர் நிகழ்த்தினர். நிறைவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நூல்களின் அறிமுகப் பிரதிகளை முறையே க.தணிகாசலம் வழங்க எஸ்.கே. இராஜேந்திரனும், ஜி.ரி கேதாரநாதன் வழங்க உடுவில் அரவிந்தனும் பெற்றுக் கொண்டனர்.
கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலில் க. தணிகாசலம், சொ. சிவபாலன், ம. சூரியசேகரன், வ. சந்திரராசா, கொற்றை பி. கிருஷ்ணானந்தன், கி. கணேசன், தெணியான், ஏ.சி.ஜோர்ச், இராஜேஸ்கண்ணன், ரமேஸ், க. தர்மதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்























 

சனி, அக்டோபர் 19, 2013

சீனா உதயகுமாரின் "என் பேனாவின் நிதர்சனம்" – கவிதைநூல் வெளியீடு




‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுத்தாளர் சமரபாகு சீனா உதயகுமாரின் “என் பேனாவின் நிதர்சனம்” என்ற கவிதைநூல் வெளியீட்டுவிழா 18.10.2013 வெள்ளிக்கிழமை மாலை 3.16 மணிக்கு யா/கொற்றாவத்தை அ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு அ. அன்பழகன் தலைமை வகித்தார். வெளியீட்டுரையை கவிஞர் த. ஜெயசீலன் (பிரதேச செயலர் பருத்தித்துறை) நிகழ்த்தினார். நூலின் முதற்பிரதியை டாக்டர் மா. பிரபாகரனும் சிறப்புப்பிரதியை விரிவுரையாளர் எம். அனந்தகிருஸ்ணாவும் பெற்றுக் கொண்டனர். நூலின் நயப்புரையை சு. குணேஸ்வரனும், வேல்நந்தனும் நிகழ்த்தினர். ஏற்புரையை நூலாசிரியர் நிகழ்த்தினார்.

மண்டபம் நிரம்பிய ஆர்வலர்களின் வருகையும் குறித்த நேரத்திற்கு நிகழ்வு தொடங்கி நிறைவுபெற்றமையும் கச்சிதமான ஒழுங்கமைப்பும் இந்நூல் வெளியீட்டில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தின.

பதிவு - சு. குணேஸ்வரன்
ஒளிப்படங்கள் – யாத்திரிகன்


 
 









 

சனி, ஆகஸ்ட் 24, 2013

அகிலின் ‘கூடுகள் சிதைந்தபோது நூல் அறிமுகமும் அ. யேசுராசாவுடனான அனுபவப் பகிர்வும்





யாழ்ப்பாணம் வடமராட்சியைக் களமாகக் கொண்டியங்கும் ‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் 10 வது இலக்கிய நிகழ்வாக நூல் அறிமுகமும் அனுபவப் பகிர்வும் 24.08.2013 சனிக்கிழமை வதிரிவடக்கு மிசன் பாடசாலை நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

சின்னராஜா விமலன் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் எழுத்தாளர் ‘அகில்’ எழுதிய கூடுகள் சிதைந்தபோது சிறுகதைத்தொகுதி பற்றிய உரைகள் இடம்பெற்றன. உரைகளை மூத்த எழுத்தாளர் கே. ஆர் டேவிட், இ. சு முரளிதரன் ஆகியோர் நிகழ்த்தினர். நூலின் அறிமுகப் பிரதியை கே. ஆர் டேவிட் வழங்க சி. வன்னியகுலம் பெற்றுக்கொண்டார்.

விமர்சகரும் எழுத்தாளருமான அ. யேசுராசாவுடனான அனுபவப் பகிர்வு தொடர்ந்து இடம்பெற்றது. “இலக்கிய உலக அனுபவங்கள்” என்ற தலைப்பில் தனது எழுத்துலக அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இறுதியாக கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலில் சி. வன்னியகுலம், இ. இராஜேஸ்கண்ணன், சித்தாந்தன், தானாவிஷ்ணு, ஜி.ரி கேதாரநாதன், இ. சிறீஸ்கந்தராஜா, மு. அநாதரட்சகன் ஆகியோர் பங்குகொண்டனர். நன்றியுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

பதிவும் படங்களும் – சு. குணேஸ்வரன்

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்