சனி, மார்ச் 26, 2016

வடமராட்சியில் இடம்பெற்ற ‘மறுமலர்ச்சி’ அறிமுக நிகழ்வு




உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் ஈழத்தின் முதலாவது தமிழ் இலக்கிய இதழாகிய “மறுமலர்ச்சி” இதழ்களின் தொகுப்புக்கான (1946-1948) நூல் அறிமுகநிகழ்வு 26.03.2016 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு கரவெட்டி பிரதேச செயலக மண்டபத்தில் எழுத்தாளர் கோப்பாய் சிவம் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் அறிமுகவுரையை டாக்டர் எம்.கே முருகானந்தன் (எழுத்தாளர்) நிகழ்த்தினார். கருத்துரைகளை எழுத்தாளர்கள் இராகவன், த. அஜந்தகுமார் ஆகியோர் நிகழ்த்தினர். சிறப்புரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகவியற்றுறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சு. ஜீவசுதன் நிகழ்த்தினார். நிகழ்வில் அறிமுகப்பிரதிகளை கரவெட்டி பிரதேச செயலக கலாசாரப்பேரவைக்காக கலாசார உத்தியோகத்தர் ச. சிவஞானசீலனும், வடமராட்சி சுருக்கெழுத்துக்கழகத்தின் சார்பில் சு. குணேஸ்வரனும் பெற்றுக்கொண்டனர். நிகழ்வில் ஏற்புரையையும் நன்றியுரையையும் செல்லத்துரை சுதர்சன் நிகழ்த்தினார்.














பதிவும் படங்களும் :சு.குணேஸ்வரன்