சனி, டிசம்பர் 17, 2011

'உயில்' கலை இலக்கிய சங்கத்தின் முதலாவது நிகழ்வு





நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்ற சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக அரங்கு 17.12.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.

எழுத்தாளர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் தலைமையில் நெல்லியடியில் அமைந்துள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை சின்னராஜா விமலனும் அறிமுகவுரையை செல்லத்துரை சுதர்சனும் நிகழ்த்தினர்.

நூல் பற்றிய கருத்துரைகளை குப்பிழான் ஐ. சண்முகன், தானாவிஷ்ணு, கிருஷ்ணபிள்ளை நவநீதன் ஆகியோர் நிகழ்த்தினர்.

நன்றியுரையை சு.குணேஸ்வரனும் ஏற்புரையை நந்தினி சேவியரும் நிகழ்த்தினர்.

‘பறைதல் பகிர்தல் பதிதல்’ என்ற மகுட வாக்கியத்துடன் இலக்கியச் செயற்பாட்டுக்கு களம் அமைக்க முகிழ்த்துள்ள ‘உயில்’ அமைப்பின் முதலாவது நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
(உரைகளின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்)

நந்தினி சேவியரின் ஏற்புரை - காணொளிhttp://www.youtube.com/watch?v=Wdz9oBWn4D4&context=C3625d15ADOEgsToPDskLlH_sFOLnbo6mY1fQb5jix

படங்கள் - கமலசுதர்சன், சு.குணேஸ்வரன்


சின்னராஜா விமலன்

கொற்றை பி.கிருஸ்ணானந்தன்

செல்லத்துரை சுதர்சன்

கிருஷ்ணபிள்ளை நவநீதன்

நூலின் பிரதியை நந்தினி சேவியர்
கதிர் தணிகாலசம் அவர்களுக்கு வழங்குகிறார் 






தானா விஷ்ணு

குப்பிழான் ஐ.சண்முகன்

சு.குணேஸ்வரன்

நந்தினிசேவியருடன் உரையாளர்கள்


நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்களுடன் 
நந்தினி சேவியர்



7 கருத்துகள்:

  1. எங்கள் வலைப்பதிவின் முதல் வருகையாளர் நீங்கள். உங்கள் வரவுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  2. படங்களுடன் சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அப்படியா? வரவுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு