ஞாயிறு, நவம்பர் 10, 2013

உயில் ஏற்பாட்டில் எழுநாவின் இரண்டு நூல்கள் விமர்சன அரங்கு



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் எழுநா வெளியீட்டகத்தின் இரண்டு நூல்களுக்கான விமர்சன அரங்கு 10.11.2013 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/ வதிரிவடக்கு மெ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் எழுத்தாளர் அநாதரட்சகன் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் பரஞ்சோதி தங்கேஸ் எழுதிய “யாழ்ப்பாணத் தமிழர் கலாசாரத்தில் சாதியமும் இனத்துவமும்” என்ற நூல் பற்றிய விமர்சன உரைகளை தெணியான், ஏ.சீ.ஜோர்ச் ஆகியோர் நிகழ்த்தினர்.

தொடர்ந்து அ. கௌரிகாந்தன் எழுதிய “யாழ்ப்பாண சமூக உருவாக்கமும் விபுலாநந்தரும்” என்ற நூலுக்கான விமர்சன உரைகளை இ. இராஜேஸ்கண்ணன், சி. ரமேஸ் ஆகியோர் நிகழ்த்தினர். நிறைவுரையை சு. குணேஸ்வரன் நிகழ்த்தினார்.

நூல்களின் அறிமுகப் பிரதிகளை முறையே க.தணிகாசலம் வழங்க எஸ்.கே. இராஜேந்திரனும், ஜி.ரி கேதாரநாதன் வழங்க உடுவில் அரவிந்தனும் பெற்றுக் கொண்டனர்.
கலந்துரையாடலும் இடம்பெற்றது. கலந்துரையாடலில் க. தணிகாசலம், சொ. சிவபாலன், ம. சூரியசேகரன், வ. சந்திரராசா, கொற்றை பி. கிருஷ்ணானந்தன், கி. கணேசன், தெணியான், ஏ.சி.ஜோர்ச், இராஜேஸ்கண்ணன், ரமேஸ், க. தர்மதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பதிவும் படங்களும் - சு. குணேஸ்வரன்