புதன், ஜூலை 22, 2020

கற்கை நன்றே - கையேடுகளை வலயக் கல்விப் பணிமனைகளில் சேர்ப்பித்தல்



வடமாகாணத்தின் 12 வலயங்களுக்கும் கற்கை நன்றே கையேடுகளைச் சேர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம். அவ்வகையில் அச்சடிக்கப்பட்ட 1000 பிரதிகளையும் பகிர்த்தளித்திருக்கிறோம்.
 வடமராட்சி வலயம் 

 வவுனியா தெற்கு வலயம் 

  மன்னார் வலயம் 

யாழ் வலயம் 

 தென்மராட்சி வலயம் 




கற்கை நன்றே



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இடர்கால சுயகற்றல் செயற்றிட்டத்தின் 2ஆம் கட்டமாக “கற்கை நன்றே” என்ற 134 பக்கங்களைக் கொண்ட கற்றல் உதவிக் கையேடுகளில் 1000 பிரதிகளை SEHA அமைப்பினரின் அனுசரணையோடு அச்சடித்திருக்கிறோம். அதிகமும் அலகு ரீதியான வினாவிடைகளை இம்முறை இதில் உள்ளடக்கியிருக்கிறோம். கடந்த மாதம் கொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு “இடரிலும் தளரோம்” என்ற, ஒரு தொகை கற்றல் கையேடுகளை வடமராட்சியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேவையறிந்து கேட்டுக்கொண்டவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருந்தோம்.

இக்கையேடுகளை வடமாகாணத்தின் கிராமப்புறப் பிள்ளைகள் அதிகமும் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் ஒப்படைத்திருக்கிறோம். இந்த முயற்சிக்குத் துறைசார்ந்த ஆசிரியர்கள் அலகுரீதியான வினாவிடைகளைத் தயாரித்துத் தந்து உதவியிருக்கிறார்கள். தொடர்ந்து பயணிப்போம்.

-உயில் செயற்பாட்டாளர்கள் சார்பில் சு.குணேஸ்வரன்-