ஞாயிறு, ஜூலை 22, 2012

பேராசிரியர் செ. யோகராசா உரை



 வடமராட்சியைக் களமாகக் கொண்டு இயங்கும் 'உயில் கலை இலக்கிய சங்கம்' இலக்கியக் கருத்துரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.

“அண்மைக்கால இலக்கியப்போக்கு” என்ற பொருளில் பேராசிரியர் செ. யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழகம், மொழித்துறை) அவர்கள் நெல்லியடி Maths Centre இல் ஞாயிறு பி.ப 4.00 மணிக்கு கருத்துரை நிகழ்த்தினார்.

மேற்படி நிகழ்வு ஓவியர் கோ. கைலாசநாதனின் தொடக்கவுரையுடன் ஆரம்பமாகியது.

நிகழ்வில் செ. யோகராசா அவர்கள் உரை நிகழ்த்தும்போது கடந்த மூன்றாண்டுகளில் ஈழம் மற்றும் புகலிட இலக்கியப் போக்குப் பற்றிக் குறிப்பிட்டார். இக்காலத்தில் வெளிவந்த புனைவுசார் படைப்புக்கள், புனைவுசாராப் படைப்புக்கள் ஆகியன குறித்துக்காட்டும் பொருள் பற்றியும் அவற்றின் போதாமை பற்றியும் எடுத்துக்கூறினார்.

நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கலந்துரையாடலில் பங்கெடுத்தனர். நன்றியுரையை அஜந்தகுமார் நிகழ்த்தினார்.

பதிவும் படங்களும் சு. குணேஸ்வரன்




சனி, ஜூலை 21, 2012



உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் 
 இலக்கியக் கருத்தரங்கு 

 “அண்மைக்கால இலக்கியப்போக்கு” என்ற பொருளில் பேராசிரியர் செ. யோகராசா (கிழக்குப் பல்கலைக்கழகம், மொழித்துறை) அவர்கள் நெல்லியடி Maths Centre இல் ஞாயிறு 22.07.2012 பி.ப 3.15 மணிக்கு கருத்துரை நிகழ்த்துவார். ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம். 

- உயில் செயற்பாட்டாளர்கள்