புதன், ஜூலை 22, 2020
கற்கை நன்றே
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த சாதாரணதர மாணவர்களுக்கான இடர்கால சுயகற்றல் செயற்றிட்டத்தின் 2ஆம் கட்டமாக “கற்கை நன்றே” என்ற 134 பக்கங்களைக் கொண்ட கற்றல் உதவிக் கையேடுகளில் 1000 பிரதிகளை SEHA அமைப்பினரின் அனுசரணையோடு அச்சடித்திருக்கிறோம். அதிகமும் அலகு ரீதியான வினாவிடைகளை இம்முறை இதில் உள்ளடக்கியிருக்கிறோம். கடந்த மாதம் கொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு “இடரிலும் தளரோம்” என்ற, ஒரு தொகை கற்றல் கையேடுகளை வடமராட்சியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தேவையறிந்து கேட்டுக்கொண்டவர்களுக்கும் இலவசமாக வழங்கியிருந்தோம்.
இக்கையேடுகளை வடமாகாணத்தின் கிராமப்புறப் பிள்ளைகள் அதிகமும் கல்வி கற்கும் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வலயக் கல்வி அலுவலகங்கள் ஊடாகவும் நேரடியாகவும் ஒப்படைத்திருக்கிறோம். இந்த முயற்சிக்குத் துறைசார்ந்த ஆசிரியர்கள் அலகுரீதியான வினாவிடைகளைத் தயாரித்துத் தந்து உதவியிருக்கிறார்கள். தொடர்ந்து பயணிப்போம்.
-உயில் செயற்பாட்டாளர்கள் சார்பில் சு.குணேஸ்வரன்-
செவ்வாய், மே 19, 2020
இடரிலும் தளரோம் -கற்றல் கையேடு
கொரோனா இடர்க்காலத்தைக் கருத்திற்கொண்டு க.பொ. த(சா/த) மாணவர்களுக்காக தமிழ்,கணிதம்,விஞ்ஞானம்,வரலாறு, ஆங்கிலம்,சமயம் ஆகிய பிரதான பாடங்களுக்கான வினாவிடைகளும் செயலட்டைகளும் கொண்ட 144 பக்கங்களில் கற்றல் கையோட்டினைத் தொகுத்திருக்கிறோம். அதிகமும் கிராமப்புறப் பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதற்காக (இலவசமாக) பொருத்தமானவர்களிடம் சேர்ப்பித்திருக்கிறோம்.
சு.குணேஸ்வரன், இ. இராஜேஸ்கண்ணன்,செ.சுதர்சன், சி.விமலன், ஆ.வினோதன் (யாத்திரிகன்), த.விஜயசங்கர் (தானா விஷ்ணு), கே.எம்.செல்வதாஸ், க.சிறீரஞ்சன் ஆகிய நண்பர்களின் கூட்டிணைவில் இது சாத்தியமாகியிருக்கிறது.
(முதற்கட்டமாக வடமராட்சியில் எமது வசிப்பிடங்களுக்கு அருகில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு குறித்த பிரதிகள் சிலவற்றை வழங்கியிருக்கிறோம்)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)