செவ்வாய், மார்ச் 04, 2014

சு. குணேஸ்வரனின் “உள்ளும் வெளியும்”





உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் சு. குணேஸ்வரன் எழுதிய ஆய்வுக்கட்டுரைகள் கொண்ட தொகுதியான “உள்ளும் வெளியும்” நூல் வெளியீடு 02.03.2014 ஞாயிறு காலை 9.30 மணிக்கு யா/தேவரையாளி இந்துக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.


நிகழ்வுக்கு எழுத்தாளர் குப்பிழான் ஐ. சண்முகன் தலைமை வகித்தார். நிகழ்வில் மங்கள விளக்கேற்றலைத் தொடர்ந்து இறைவணக்கத்தினை செல்விகள் மீனுதா ரவிரதன், பிரபாஜினி நவரத்தினராசா ஆகியோர் இசைத்தனர்.

வரவேற்புரையை உயில் செயற்பாட்டாளர்களில் ஒருவராகிய சி. விமலன் நிகழ்த்தினார். தொடர்ந்து வாழ்த்துரைகளை யா/தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசாவும்; வடமராட்சி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் அ. சிறீகரனும் நிகழ்த்தினர்.

நூல் வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் திரு இரா . இராஜேஸ்கண்ணன் நிகழ்த்தினார். தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது.

நூலின் முதற்பிரதியை லெனில் மதிவானம் வழங்கி வைக்க, அதனை கலாபூஷணம் கவிஞர் வதிரி கண எதிர்வீரசிங்கம் பெற்றுக் கொண்டார். கௌரப் பிரதிகளை மூத்த எழுத்தாளர் தெணியான் வழங்கி வைக்க அதனை ஓவியர் கோ. கைலாசநாதன், கவிஞர் தானாவிஷ்ணு, யா உடுப்பிட்டி மகளிர் கல்லூரி அதிபர் கௌரி சேதுராஜா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நூலின் சிறப்புப் பிரதிகளை தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலய அதிபர் இரா. சிறீநடராசா வழங்கி வைத்தார்,


தொடர்ந்து மதிப்பீட்டுரை இடம்பெற்றது. மதிப்பீட்டுரையை கவிஞரும் விமர்சகருமாகிய கருணாகரன் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சு. குணேஸ்வரனும் நன்றியுரையை ஆசிரியர் திரு வீ.வீரகுமாரும் நிகழ்த்தினர்.

மேற்படி நூலை யாழ்ப்பாணம் புத்தகக்கூடம் (BOOK LAB) வெளியீடாக வந்துள்ளது. நூலின் முகப்பு அட்டை ஓவியத்தை ஓவியர் கோ. கைலாசநாதன் வரைந்துள்ளார். தானாவிஷ்ணுவின் வடிவமைப்பில் ஆகாயம் பதிப்பகத்தின் ஊடாக நூல் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒளிப்படங்கள் - யாத்திரிகன்














































ஒளிப்படங்கள் : யாத்திரிகன்

இணைப்புக்கள்
http://tamil.dailymirror.lk/kalai/101840-2014-03-02-12-50-49.html


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக