புதன், மார்ச் 26, 2014

உயில் - இரண்டாவது வெளியீடாக "விசையுறு பந்தினைப்போல்" நூல் வெளியீடு





உயில் கலை இலக்கிய சங்கத்தின் இரண்டாவது வெளியீடாக சி. விமலன் எழுதிய “விசையுறு பந்தினைப்போல்” என்ற விளையாட்டுத்துறைசார் பத்தி எழுத்துக்களைக் கொண்ட நூலின் வெளியீட்டு நிகழ்வு 26.03.2014 புதன் மாலை 4.00 மணிக்கு தேவரையாளி இந்துக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வில் மங்களவிளக்கேற்றலைத் தொடர்ந்து இறைவணக்கத்தினை செல்வி தணிகா பஞ்சலிங்கம் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் தலைவர் திரு டி. எம் வேதாபரணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வுக்கு யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவத்துறை முன்னாள் பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் பிரதமவிருந்தினராக கலந்துகொண்டார். வடமாகாண விளையாட்டுத்திணைக்களப் பணிப்பாளர் எஸ். எம். ராஜா ரணசிங்க சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டார்.

வரவேற்புரையை வவுனியா வளாக கணனி விஞ்ஞானத்துறை விரிவுரையாளர் வி. செந்தூரன் நிகழ்த்தினார். நூல் வெளியீட்டுரையை வடமராட்சி உதைபந்தாட்ட லீக் செயலாளரும் கிராம அலுவலருமான தி. வரதராஜன் நிகழ்த்தினார்.

பிரதமவிருந்தினராகக் கலந்துகொண்ட பேராசிரியர் மா. நடராஜசுந்தரம் நூலை வெளியிட சிறப்புவிருந்தினராகக் கலந்து கொண்ட எஸ். எம். ராஜா ரணசிங்க பெற்றுக்கொண்டார்.

மதிப்பீட்டுரையை யாழ்ப்பாண கிரிக்கற் மத்தியஸ்தர் சங்க முன்னாள் தலைவரும் இலங்கை மெய்வல்லுநர் சங்க தொழில்நுட்பக் குழு உறுப்பினருமாகிய ப. முருகவேல் நிகழ்த்தினார். ஏற்புரையை நூலாசிரியர் சி. விமலன் நிகழ்த்தினார். மேற்படி நிகழ்வு வடமராட்சி உதைபந்தாட்ட லீக்கின் அனுசரணையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

படங்கள் : யாத்திரிகன், துவாரகன்
பதிவு : சு. குணேஸ்வரன்












1 கருத்து: