நூலகம் தொடர்பான நிகழ்வொன்று 29.01.2012 இல் உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்வு பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
சனி, ஜனவரி 28, 2012
நூலகம் தொடர்பான நிகழ்வு
நூலகம் தொடர்பான நிகழ்வொன்று 29.01.2012 இல் உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்நிகழ்வு பெப்ரவரி மாதத்திற்கு பிற்போடப்பட்டுள்ளது.
திங்கள், ஜனவரி 09, 2012
'நூலகம்' 'புதிய நூலகம்' உரையும் அறிமுகமும்
நூலகம் நிறுவனத்தின் ஆவணமாக்கல் மற்றும் செயற்பாடுகள் குறித்தும் புதிய நூலகம் செய்திமடல் குறித்தும் (இதழ்கள் 9,10) உரையாடலும் அறிமுகமும் வரும் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்.
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவிருக்கும் இந்நிகழ்வு பற்றிய மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
- உயில் செயற்பாட்டாளர்கள்
வெள்ளி, டிசம்பர் 23, 2011
மாணவருக்கான கருத்தரங்கு
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் க.பொ.த உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 'தற்காலக் கவிதைகள்' என்ற கருத்தரங்கு இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வு கவிஞர் தானா விஷ்ணு தலைமையில் நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தீல் 23.12.2011 காலை 9.30 மணி முதல் 12.30 மணிவரை இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் இ. இராஜேஸ்கண்ணன், சு. குணேஸ்வரன், செ. சுதர்சன், வேல் நந்தகுமார், த. அஜந்தகுமார் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு பாடப்பரப்பின் குறித்த கவிதைகள் பற்றி உரையாற்றினர்.
நிகழ்வில் கருத்தரங்கு பற்றிய தமது கருத்துக்களை மாணவர்கள் தெரிவித்தனர். நன்றியுரையை உயில் அமைப்பின் சார்பில் கவிஞர் யாத்திரீகன் நிகழ்த்தினார்.
பரீட்சை நோக்கினை மையமாகக் கொண்ட இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு கையேடுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
பெருமளவான மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வு மனநிறைவினைத் தந்தது.
- உயில் செயற்பாட்டாளர்கள்
புதன், டிசம்பர் 21, 2011
உயில் கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கருத்தரங்கு
க.பொ.த உயர்தரத்தில் தமிழை ஒரு பாடமாகக் கற்கும் மாணவர்களுக்கு 'தற்காலக் கவிதைகள்' கருத்தரங்கு
(பாடத்திட்டத்தில் உள்ள பாரதி முதல் குறிஞ்சித்தென்னவன் வரையிலான கவிதைகள்)
இடம்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபம்
காலம்
நெல்லியடி மத்திய மகாவித்தியாலய மண்டபம்
காலம்
சனி, டிசம்பர் 17, 2011
'உயில்' கலை இலக்கிய சங்கத்தின் முதலாவது நிகழ்வு
நந்தினி சேவியரின் “நெல்லிமரப் பள்ளிக்கூடம்” என்ற சிறுகதைத் தொகுதிக்கான அறிமுக அரங்கு 17.12.2011 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.
எழுத்தாளர் கொற்றை பி. கிருஸ்ணானந்தன் தலைமையில் நெல்லியடியில் அமைந்துள்ள வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை சின்னராஜா விமலனும் அறிமுகவுரையை செல்லத்துரை சுதர்சனும் நிகழ்த்தினர்.
நூல் பற்றிய கருத்துரைகளை குப்பிழான் ஐ. சண்முகன், தானாவிஷ்ணு, கிருஷ்ணபிள்ளை நவநீதன் ஆகியோர் நிகழ்த்தினர்.
நன்றியுரையை சு.குணேஸ்வரனும் ஏற்புரையை நந்தினி சேவியரும் நிகழ்த்தினர்.
‘பறைதல் பகிர்தல் பதிதல்’ என்ற மகுட வாக்கியத்துடன் இலக்கியச் செயற்பாட்டுக்கு களம் அமைக்க முகிழ்த்துள்ள ‘உயில்’ அமைப்பின் முதலாவது நிகழ்வாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் இருந்து சில ஒளிப்படங்கள்
(உரைகளின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்)
நந்தினி சேவியரின் ஏற்புரை - காணொளிhttp://www.youtube.com/watch?v=Wdz9oBWn4D4&context=C3625d15ADOEgsToPDskLlH_sFOLnbo6mY1fQb5jix
படங்கள் - கமலசுதர்சன், சு.குணேஸ்வரன்
சின்னராஜா விமலன்
கொற்றை பி.கிருஸ்ணானந்தன்
செல்லத்துரை சுதர்சன்
கிருஷ்ணபிள்ளை நவநீதன்
நூலின் பிரதியை நந்தினி சேவியர்
கதிர் தணிகாலசம் அவர்களுக்கு வழங்குகிறார்
கதிர் தணிகாலசம் அவர்களுக்கு வழங்குகிறார்
தானா விஷ்ணு
குப்பிழான் ஐ.சண்முகன்
சு.குணேஸ்வரன்
நந்தினிசேவியருடன் உரையாளர்கள்
நிகழ்வில் கலந்து கொண்ட நண்பர்களுடன்
நந்தினி சேவியர்
செவ்வாய், டிசம்பர் 13, 2011
நந்தினி சேவியரின் "நெல்லிமரப் பள்ளிக்கூடம்"
நூல் அறிமுக அரங்கு
இடம்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசசபை மண்டபம், மாலிசந்தி, நெல்லியடி.
காலம்
17.12.2011 சனிக்கிழமை மாலை 3.00-5.30 மணிவரை
தலைமை
கொற்றை பி. கிருஸ்ணானந்தன்
உரை நிகழ்த்துவோர்
குப்பிழான் ஐ. சண்முகன்/ தானாவிஷ்ணு
செ.சுதர்சன்/ கி.நவநீதன்/ சி.விமலன்
சு.குணேஸ்வரன்/ நந்தினி சேவியர்
ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம்
உயில்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)










